பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே!

சரணங்கள்


1. தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும்

இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் - ஓடியே வா

2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப

பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ - ஓடியே வா

3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்

கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
அழைக்கிறார் - ஓடியே வா

No comments:

Post a Comment